Powered By Blogger

18 டிசம்பர் 2008

தலைகீழான சொற்கள்

சொற்களை வலமிருந்து இடமாகவே தமிழில் எழுதிப் படிப்போம், ஆனால் சில சொற்களை இடமிருந்து வலமாகவும் வாசிக்கலாம்.

விகடகவி, திகதி போன்ற சொற்கள் உள்ளன, இவை மட்டுமன்றி சொற்கூட்டமாக, வசனமாக, பாடல் வரிகளாகவும் தமிழ் மொழியில் தலைகீழாக அமைந்து உள்ளன.

தேவாரம் பாடிய ஞானசம்பந்தர் "மாலை மாற்று" எனும் பதிகத்தையும் பாடியுள்ளார்,

"யாமாமா நீயாமா மாயாழீ காமா காணாகா

கானா காமா காழீயா மாமாயா நீ மாமாயா"

இவ் வரிகள் சம்பந்தரின் மாலை மாற்று பதிகத்தில் உள்ளதாகும்.இதன் பொருள் சாதாரண மனிதனால் எதுவும் செய்ய முடியாது, மகா சக்தி வாய்ந்த இறைவனால் தான் அனைத்தையும் ஆட்டுவிக்க முடியும்.

இதே போன்று ஆங்கிலத்திலும் வரிகள் உள்ளன.

"LIVE NOT ON EVIL"