Powered By Blogger

23 டிசம்பர் 2008

மகாகவி பாரதியின் - தேடிச் சோறுநிதந் தின்று

தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி –
மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள்
செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக்
கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே -
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ? நின்னைச் சில வரங்கள்
கேட்பேன் - அவைநேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்மூளாதழிந்திடுதல்
வேண்டும் - இனி என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங்
கவலையறச் செய்து - மதிதன்னை மிகத் தெளிவு செய்து -
என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!