Powered By Blogger

18 டிசம்பர் 2008

சில மருத்துவ குறிப்புகள்

இங்கே சில பொருட்களின் தன்மைகள்

உடற்சூட்டை தணிப்பவை

பச்சைப்பயிறு , மோர் , உளுந்தவடை , பனங்கற்கண்டு , வெங்காயம் , சுரைக்காய் , நெல்லிக்காய் , வெந்தயக்கீரை , மாதுளம் பழம் நாவற்பழம் , கோவைக்காய் , இளநீர்

ருசியின்மையைப் போக்குபவை

புதினா , மல்லி , கறிவேப்பிலை , நெல்லிக்காய் , எலுமிச்சை , மாவடு , திராட்சை , வெல்லம் , கருப்பட்டி , மிளகு , நெற்பொறி

சிவப்பணு உற்பத்திக்கு

புடலைங்காய் , பீட்ரூட் , முருங்கைக்கீரை , அவரை , பச்சைநிறக் காய்கள் , உளுந்து , துவரை , கம்பு , சோளம் கேழ்வரகு ,பசலைக்கீரை

மருந்தை முறிக்கும் உணவுகள்

அகத்தி , பாகற்காய், வேப்பிலை , நெய் , கடலைப்பருப்பு , கொத்தவரை , எருமைப்பால் . சோம்பு , வெள்ளரிக்காய்

விஷத்தை நீக்கும் உணவுகள்

வெங்காயம் , பூண்டு , சிறுகீரை , வேப்பிலை , மிளகு , மஞ்சள் , காயம்பித்தம் தணிப்பவைசீரகம் , கருப்பட்டி , வெல்லம் , சுண்டைவற்றல் செவ்விளநீர் , அரைக்கீரை , எலுமிச்சை

நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

வாய் துர்நாற்றத்தால் சங்கடமா? எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும், வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய்துர்நாற்றம் நீங்கும்.

தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா? வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில் ஒரு நெல்லை வைத்து விழுங்க, முடி வெளியேறி பேதியும் நிற்கும்.


வேனல் கட்டி தொல்லையா? வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.

தினமும் சப்போட்டா பழம் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் அண்டாது.

பொன்னாங்கண்ணி கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். உடம்பில் உள் சூடும் குறையும். இக்கீரையின் தைலத்தை தலை முழுகப் பயன்படுத்தி வந்தால் கண் நோய் அண்டாது. உடல் சூடு தணியும்.

அரைக் கீரை தைலமும் உடல் சூட்டைத் தணிக்கும்.

பாகற்காய் வற்றலை உணவுடன் உண்டு வந்தால் மூலம், காமாலை நோய் தீரும்.

ஹோட்டல்களில் சாப்பிடுவதால் ஏற்படும் நாக்குப் பூச்சித் தொல்லை, சிறுவர்களுக்கு ஏற்படும் வயிற்றுப்பூச்சித் தொல்லை நீங்க சுண்டைக்காயை உணவுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

இரவு உணவில் சுண்டைக்காய் வற்றலை சேர்த்து வந்தால் ஆஸ்துமா, நெஞ்சு சளி, காச நோய் நீங்கும். வயிற்றுப் போக்கும் நிற்கும்.

கற்கண்டு, இஞ்சி சாறு சேர்த்து அருந்திவர நீரிழிவு நோய் கட்டுப்படும்.

இஞ்சி ஊறுகாய் ஜீரணத்துக்குப் பயன்படும். பித்தத்தைத் தணிக்கும்.

மருதாணி இலையை எலுமிச்சைச் சாற்றில் கலந்து அரைத்து கட்டினால் குதிகால் வாதம், பாத எரிச்சல் தீரும்.

வெள்ளை கரிசலாங் கண்ணி தைலத்தைத் தலைக்குத் தேய்த்து வந்தால் முடி கறுக்கும்.

கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழா நெல்லி ஆகிய இலைகளை சம அளவில் அரைத்து பாக்கு அளவில் எடுத்து மோரில் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.

கீழாநெல்லி செடியின் வேரை பசுமையாக 20 கிராம் எடுத்து அரைத்து பால், தயிர், மோர் என ஏதாவது ஒன்றுடன் கலந்து பருகினால் கை, கால் வலி நீங்கும். தேனில் கலந்து பருகி வர அம்மை நோய் தணியும்.

அரச இலையை அரைத்து பூசி வந்தால் கால் வெடிப்பு, ரணம் குணமாகும்.

அகலில் வேப்பெண்ணெயை விட்டு இரவில் எரித்து வந்தால் கொசுக்கள் பறந்துவிடும்.

துளசி இலையை வாயில் போட்டு மென்று தின்றால் பல் வலி, கூச்சம் நீங்கும். சில இலைகளைக் கசக்கி முகர்ந்து பார்த்தால் மூக்கடைப்பு நீங்கும்.

பிஞ்சு வில்வக் காயை அரைத்து தயிரில் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி, ரத்த பேதி குணமாகும்.

அறுகம்புல்லை அரைத்து காய்ச்சிய பாலில் கலந்து தினமும் காலையில் பருகி வந்தால் ரத்த மூலம் நிற்கும்.

வேப்பிலையை அரைத்து கட்டி வந்தால் ஆறாத ரணமும் ஆறும். உடையாத பழுத்த கட்டியும் உடையும்.

வேப்பங்கொட்டையினுள் உள்ள பருப்பை மை போல் அரைத்து வெந்நீரில் கலந்து குடித்தால் நஞ்சு நீங்கும்.

முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மாறாத தழும்பாக இருந்து வாட்டுகிறதா?

ஆரஞ்சு விழுது இருக்க கவலையேன்.

ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் டீஸ்பூன், கசகசா விழுது - 1 டீஸ்பூன்,சந்தனப் பவுடர் - 2 சிட்டிகை...

இவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள்.

தினமும் இரவு தூங்கப் போகும்போதுபருக்கள் வந்த இடத்தில் மூடுவது போல் பூசுங்கள். காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள்.இந்த சிகிச்சையால் வடு மறைவதுடன், பருக்களும் இனி உங்கள் முகத்தை எட்டியே பார்க்காது.

இவர்கள் இப்படி சொன்னார்கள்

IF WE CANNOT LOVE THE PERSON WHOM WE SEE,... HOW CAN WE LOVE GOD,
WHOM WE CANNOT SEE ? - MOTHER THERESA .

IF YOU WIN YOU NEED NOT EXPLAIN .......... BUT IF YOU LOSE YOU SHOULD
NOT BE THERE TO EXPLAIN - ADOLPH HITLER

IF YOU START JUDGING PEOPLE YOU WILL BE HAVING NO TIME TO
LOVE THEM - MOTHER THERESA

I'M NOT IN COMPETITION WITH ANYBODY BUT MYSELF.......... MY
GOAL IS TO BEAT MY LAST PERFORMANCE - BILL GATES

DON'T COMPARE YOURSELF WITH ANYONE IN THIS WORLD.......IF YOU
DO SO, YOU ARE INSULTING YOURSELF - ALEN STRIKE .

NEVER EXPLAIN YOURSELF TO ANYONE.......BECAUSE THE PERSON WHO
LIKES YOU DOES NOT NEED IT.........AND THE PERSON WHO DISLIKES
YOU WON'T BELIEVE IT - AUTHOR UNKNOWN

THE DREAM IS NOT WHAT YOU SEE IN SLEEP......DREAM IS WHICH
DOES NOT LET YOU SLEEP. -
DR. ABDUL KALAM (Former President of the Republic of India)


NO MAN IS RICH ENOUGH TO BUY HIS PAST - - OSCAR WILDE

IF YOU WANT REAL PEACE,.... DON'T TALK TO YOUR FRIENDS,...TALK WITH YOUR ENEMIES - MOTHER THERESA

WINNING DOESN'T ALWAYS MEAN BEING FIRST,..... WINNING MEANS
YOU'RE DOING BETTER THAN YOU'VE DONE BEFORE - BONNIE BLAIR

EVERYONE THINKS OF CHANGING THE WORLD,....... BUT NO ONE THINKS
OF CHANGING HIMSELF . - - - LEO TOLSTOY

I WILL NOT SAY I FAILED 1000 TIMES,........ I WILL SAY THAT I DISCOVERED THERE ARE 1000 WAYS THAT CAN CAUSE FAILURE. THOMAS EDISON

NEVER BREAK FOUR THINGS IN YOUR LIFE,
a) TRUST,
b) PROMISE,
c) RELATIONSHIP and
D) HEART
BECAUSE WHEN THEY BREAK THEY DON'T MAKE NOISE BUT PAIN A LOT - CHARLES

IN A DAY, WHEN YOU DON'T COME ACROSS ANY PROBLEMS YOU CAN BE SURE THAT YOU ARE TRAVELLING IN A WRONG PATH - SWAMI VIVEKANANDA

THREE SENTENCES FOR GETTING SUCCESS:
A) KNOW MORE THAN OTHER
B) WORK MORE THAN OTHER
C) EXPECT LESS THAN OTHER
- WILLIAM SHAKESPEAR

LOVE YOUR JOB BUT NEVER FALL IN LOVE WITH YOUR COMPANY BECAUSE YOU NEVER KNOW WHEN IT STOPS LOVING YOU - DR. ABDUL KALAM

IF SOMEONE FEELS THAT THEY HAD NEVER MADE A MISTAKE IN THEIR LIFE,THEN IT MEANS THEY HAD NEVER TRIED A NEW THING IN THEIR LIFE - ALBERT EINSTEIN

எனக்கு இதனை தமிழில் மொழி மாற்றம் செய்ய தெரியவில்லை அதற்க்காக மன்னிக்கவும்.....
நமக்கு ஆங்கிலம் கொஞ்சம் தடுங்கினத்தோம்

செளந்தர்யலஹரி

செளந்தர்யலஹரி ஸ்ரீ ஆதிசங்கரர் அவர்கள் அருளியது. இவை அம்பாள் ஸ்லோகங்கள்.


இந்த ஸ்லோகங்களை சொல்லி வந்தால் உங்கள்வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் வேண்டுதலுக்காக ஒவ்வொரு ஸ்லோகத்திலும் தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான ஸ்லோகங்களை கூறி வேண்டியதை பெறலாம். எல்லா ஸ்லோகங்களையும் சொல்வது சாலச் சிறந்தது.


சொளந்தர்லஹரி அழகு வெள்ளம் எனற் பெயரில் கிருபானந்தவாரியார் அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.
ஆதிசங்கரர் சமஸ்கிருதத்தில் அருளியதும், அதன் தமிழாக்கமும் இங்கு அளிக்கப்படுகிறது. இந்த ஸ்லோகங்களை கூறி அம்மன் அருள் பெறுங்கள்.


*சுபம், திருவும் சித்தி பெற* சமஸ்கிருதம்
சிவ: சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்திது -மபிந
அதஸ் -த்வா - மாராத்யாம் ஹரி - ஹர -விரிஞ்சாதிபி - ரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதம்க்ருத - புண்ய: ப்ரபவவதி// (1)

*தமிழாக்கம்:*
திங்களைச் சடையில் தரித்திடும் சிவன்பால்
தேவிநீ அன்புடன் ஒன்றித்
தங்கிடி லன்றி இயங்கிடும் திறமும்
இறைவனே இழந்திடும் என்னில்
கங்கைவார் சடையன் அயன்திரு மாலூம்
கைதொழுதேந்தியே போற்றும்
பங்கயச் செல்வி, புண்ணிய மிலார் நின்
பாதமே தொழுவதும் எளிதோ

*உலகம் உன்வசம்* சமஸ்கிருதம்
த தீயாம்ஸம் பாம்ஸும் தவ சரண- பங்கேருஹ - பவம்
விரிஞ்சி: ஸஞ்சிவன் விரசயதி லோகா -நவிகலம்ந
வஹத்யேனம் செளரி: கதமபி ஸஹஸ்ரேண - சிரஸாம்
ஹர: ஸம்ஷுத்யைநம் பஜதி பஸிதோ தூலந -விதிம் (2)

*தமிழாக்கம்:*
தாயுன்றன் பாதத் துகளினைக் கொண்டு
சதுர்முகன் உலகினைப் படைக்க
தூயதோர் ஆதி சேடன துருவில்
சுடர்முடி ஆயிரம் கொண்ட
மாயவன் உன்றன் மலரடித் துகளாம்
மாபெரு முலகுகள் சுமக்க
நாயகன் சிவனும் மேனியி லதனை
நலமுறப் பூசியே மகிழ்வான்.

*சகல கலையும் அமையும்*சமஸ்கிருதம்
அவித்யானா - மந்தஸ்திமிர- மிஹிர - த்வீப - நகரீ
ஜடானாம் சைதன்ய -ஸ்தபக - மகரந்த -ஸ்ருதிஜரீ
தரித்ராணாம் - சிந்தாமணி -குண நிகா ஜன்மஜலதெள
நிமக்னானாம் தம்ஷ்ட்ரா முரரிபு - வராஹஸ்ய பவதி (3)

*தமிழாக்கம்:*
அறிவிலார் உளத்தே அகத்திருள் மடிய
அருணநல் உதயமாய்த் தோன்றும்
செறிந்திடு கற்பக மலர் மகரந்தம்
தேர்ந்த நல் ஞானமாய் இலகும்
வறியவர் துயர் துடைத்திடும் சிந்தா
மணியென விளங்கிடும், ஆழி
பிறவினின் றெடுக்க முராரியின் வராகப்
பிறையெயி றாகுமத் துகளே!

*பயநிவர்த்தி ரோக நிவர்த்தி* சமஸ்கிருதம்
த்வதன்ய: பாணிப்யா - மபயவரதோ தைவதகண:
த்வமேகா நைவாசி ப்ரகடித - வராாபீத்யபிநயா
பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்சாஸமதிகம்
சரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபுணெள (4)

*தமிழாக்கம்:*
விஞ்சையே புரியும் திருவடியுடையாய்
வேறுள தெய்வங்கள் எல்லாம்
அஞ்சுவோர் தமக்கு அஸ்தமே காட்டி
அபயமே தருவதற் கழைக்கும்
மஞ்சுபா ஷிணியே நீயெதும் காட்டி
மனிதரை அழைத்திலை எனினும்
தஞ்சமென் றுந்தன் தாளினை அடைந்தார்
சகலமும் பெற்றுவாழ்ந் திடுவார்.

*குடும்ப ஒற்றுமை நிலவும்* சமஸ்கிருதம்
ஹரிஸ்-த்வா-மராத். ப்ரணத -ஜன செளபாக்ய - ஜனனீம் புரா நரீ பூத்வா புரரிபுமபி ஷோப -மன்யத் ஸ்மரோஸ்பி த்வாம் நத்வா ரதி -நயன- லேஹ்யன வபுஷா முனீனா -மப்- யந்த- ப்ரவதி ஹி மோஹாய மஹேதாம் (5)

*தமிழாக்கம்:*
மாந்தருக்கே செளபாக்கிய மருள்வோய் மாலுனைப் பூசனை புரிந்து போந்துதன் எழிலார் மோகினி வடிவா புராரியும் மயங்கிடப் புரிந்தாள் ஏந்திநின் பாதம் போற்றிய காமன் இரதியும் மயங்கெழில் வெய்தி சாந்தமார் முனிவர் தம்மையும் மயக்கும் சதுரனாய் ஆயின னன்றே.


நன்றி:

உடற்பாகங்கள் உயிர் வாழும் நேரம்

மனிதன் உயிரிழந்த பின்பும் அவனது உடற்பாகங்கள் உயிர் வாழும் நேரம்:

கண் - 31 நிமிடம்

மூளை - 10 நிமிடம்

கால்- 4 மணித்தியாலம்

தசை - 5 நாட்கள்

இதயம் - சில விநாடிகள்

தொடர்ந்து சொல்லிப் பாருங்கள்

ஓடுற நரியில
ஒரு நரி முட நரி
முட நரி பிடரியில்
ஒரு பிடி நரை மயிர்.


கடலோரம் உரல் உருளுது

கடலோரம் உரல் உருளுது!


புட்டும் புதுப் பிட்டு
தட்டும் புதுத் தட்டு
பிட்டைக் கொட்டிற்று
தட்டைத் தா.


வீட்டுக்கிட்ட கோரை
வீட்டுக்கு மேல கூரை
கூரை மேல நாரை.


துள்ளும் கயலோ
வெள்ளம் பாயும்
உள்ளக் கவலை
எள்ளிப் போகும்.


கருகும் சருகும் உருகும்
துகிரும் தீயில் பட்டால்!

பலாச் சுளைக் கணக்கு

"பலாவின் சுளையறிய வேண்டுமெனில் - ஆங்கு
சிறு முள்ளுக் காம்பருக் கெண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தினுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுவை" (ஆதாரம் கணக்கதிகாரம்)

பலாப்பழத்தின் காம்புக்கு அருகிலுள்ள சிறு முள்ளுகளை எண்ணி அதனை ஆறால் பெருக்கி வரும் விடையை ஐந்தால் வகுக்க கிடைக்கும் ஈவே பலாச் சுளையாகும்.

உதாரணம்:
காம்பைச் சுற்றியுள்ள சிறு முள்ளின் எண்ணிக்கை 100 எனில்
100 x 6 = 600
600 x 5 = 120
பலாச்சுளைகளின் எண்ணிக்கை = 120 ஆகும்.

உங்களுக்கு பொறுமை இருந்தால் பலாபழாத்தின் மேல் உள்ள சிறு முள்ளுகளை எண்ணி கணக்கு போட்டு பாருங்களேன்.............

தந்திரக் கணக்கு

1. ஒரு இலக்கத்தை நினைவில் வைத்துக் கொள்ளவும். ( y )

2. அதனை இரு மடங்காக மாற்றவும். ( y X 2 )

3. 50 க் கூட்டவும். ( Y x 2 ) + 50

4. அதனை இரண்டால் வகுக்கவும்.

( Y x 2 ) + 50
2
5. நினைவில் வைத்திருந்த இலக்கத்தைக் கழிக்கவும்.

6. விடை 25

உதாரணம்:

1. 5

2. 5 x 2 = 10

3. 10 + 50 = 60

4. 60
2
= 30

5. 30 - 5

6. 25

அதாவது மூன்றாவது படிமுறையில் கூறப்பட்ட 50 இன் அரைவாசியே 25 ஆகும்.
இவ் இலக்கத்தை விரும்பியவாறு மாற்றம் செய்யலாம்.

தந்திரக் கணக்குகள்

"புலம் மூன்றில் மேய்ந்து வழி ஐந்திற் சென்று
இனமான ஏழ்குளம் நீருண்டு - கடினமான
கா ஒன்பதிற் சென்று காடவர்கோன் பட்டணத்தில்
போவது வாசற்பத்திற் புக்கு" (கணக்கதிகாரம் நூலில் இருந்து)


மூன்று புலத்தில் மேய்ந்த யானைகள், ஐந்து வழியாகச் சென்று, ஏழு குளத்தில் நீருண்டு, ஒன்பது மாதத்தடியில் நின்று, பத்து வாசலில் பிரிந்து சென்றது என்றால் மொத்த யானைகள் எத்தனை?

விடை: யானைகளின் மொத்த எண்ணிக்கை - 630
(3,5,7,9,10 ஆகிய எண்களின் மீ.சி. ம. 630)

3 x 5 x 7 x 9 x 10 = 9450

தலைகீழான சொற்கள்

சொற்களை வலமிருந்து இடமாகவே தமிழில் எழுதிப் படிப்போம், ஆனால் சில சொற்களை இடமிருந்து வலமாகவும் வாசிக்கலாம்.

விகடகவி, திகதி போன்ற சொற்கள் உள்ளன, இவை மட்டுமன்றி சொற்கூட்டமாக, வசனமாக, பாடல் வரிகளாகவும் தமிழ் மொழியில் தலைகீழாக அமைந்து உள்ளன.

தேவாரம் பாடிய ஞானசம்பந்தர் "மாலை மாற்று" எனும் பதிகத்தையும் பாடியுள்ளார்,

"யாமாமா நீயாமா மாயாழீ காமா காணாகா

கானா காமா காழீயா மாமாயா நீ மாமாயா"

இவ் வரிகள் சம்பந்தரின் மாலை மாற்று பதிகத்தில் உள்ளதாகும்.இதன் பொருள் சாதாரண மனிதனால் எதுவும் செய்ய முடியாது, மகா சக்தி வாய்ந்த இறைவனால் தான் அனைத்தையும் ஆட்டுவிக்க முடியும்.

இதே போன்று ஆங்கிலத்திலும் வரிகள் உள்ளன.

"LIVE NOT ON EVIL"

பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை

1. வாழ்க்கை ஒரு சவால்
அதனை சந்தியுங்கள்.

2. வாழ்க்கை ஒரு பரிசு
அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.

3. வாழ்க்கை ஒரு சாகசப் பயணம்
அதனை மேற்கொள்ளுங்கள்.

4. வாழ்க்கை ஒரு சோகம்
அதனை கடந்து வாருங்கள்.

5. வாழ்க்கை ஒரு துயரம்
அதனை தாங்கிக் கொள்ளுங்கள்.

6. வாழ்க்கை ஒரு கடமை
அதனை நிறைவேற்றுகள்.

7. வாழ்க்கை ஒரு விளையாட்டு
அதனை விளையாடுங்கள்.

8. வாழ்க்கை ஒரு வினோதம்
அதனை கண்டறியுங்கள்.

9. வாழ்க்கை ஒரு பாடல்
அதனை பாடுங்கள்.

10. வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம்
அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

11. வாழ்க்கை ஒரு பயணம்
அதனை புகழுடன் முடித்துவிடுங்கள்.

12. வாழ்க்கை ஒரு உறுதிமொழி
அதனை நிறைவேற்றுங்கள்.

13. வாழ்க்கை ஒரு காதல்
அதனை அனுபவியுங்கள்.

14. வாழ்க்கை ஒரு அழகு
அதனை ஆராதியுங்கள்.

15. வாழ்க்கை ஒரு உணர்வு
அதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

16. வாழ்க்கை ஒரு போராட்டம்
அதனை எதிர்கொள்ளுங்கள்.

17. வாழ்க்கை ஒரு குழப்பம்
அதனை விடைகாணுங்கள்.

18. வாழ்க்கை ஒரு இலக்கு
அதனை எட்டிப் பிடியுங்கள்.