Powered By Blogger

18 டிசம்பர் 2008

தொடர்ந்து சொல்லிப் பாருங்கள்

ஓடுற நரியில
ஒரு நரி முட நரி
முட நரி பிடரியில்
ஒரு பிடி நரை மயிர்.


கடலோரம் உரல் உருளுது

கடலோரம் உரல் உருளுது!


புட்டும் புதுப் பிட்டு
தட்டும் புதுத் தட்டு
பிட்டைக் கொட்டிற்று
தட்டைத் தா.


வீட்டுக்கிட்ட கோரை
வீட்டுக்கு மேல கூரை
கூரை மேல நாரை.


துள்ளும் கயலோ
வெள்ளம் பாயும்
உள்ளக் கவலை
எள்ளிப் போகும்.


கருகும் சருகும் உருகும்
துகிரும் தீயில் பட்டால்!