Powered By Blogger

18 டிசம்பர் 2008

பலாச் சுளைக் கணக்கு

"பலாவின் சுளையறிய வேண்டுமெனில் - ஆங்கு
சிறு முள்ளுக் காம்பருக் கெண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தினுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுவை" (ஆதாரம் கணக்கதிகாரம்)

பலாப்பழத்தின் காம்புக்கு அருகிலுள்ள சிறு முள்ளுகளை எண்ணி அதனை ஆறால் பெருக்கி வரும் விடையை ஐந்தால் வகுக்க கிடைக்கும் ஈவே பலாச் சுளையாகும்.

உதாரணம்:
காம்பைச் சுற்றியுள்ள சிறு முள்ளின் எண்ணிக்கை 100 எனில்
100 x 6 = 600
600 x 5 = 120
பலாச்சுளைகளின் எண்ணிக்கை = 120 ஆகும்.

உங்களுக்கு பொறுமை இருந்தால் பலாபழாத்தின் மேல் உள்ள சிறு முள்ளுகளை எண்ணி கணக்கு போட்டு பாருங்களேன்.............