Powered By Blogger

17 டிசம்பர் 2012

சிவபெருமான்

சிவபெருமான்

 கருத்திற்கு எட்டாத,
வண்ணமில்லாத,
குணமில்லாத,

அறியமுடியாப் பொருளாய்,
எங்கும் நீக்கமற நிறைந்துள்ளவராய்,
அழியா சோதியாய் அமைந்துள்ளவர் சிவபெருமான்.

அவர் அனைத்து ஆன்மாக்களிலும் ஆணவம் மட்டும் நிலையாக இருப்பதை அறிந்தார். அதனை அகற்ற அருள் செய்தார். அதனால் ஞானத்தை கொடுத்து அதன் மூலமாக ஆணவம், கன்மம், மாயையை அகற்றி இறுதியில் தூய்மையான தன்னை வந்து அடையும்படி செய்தார். எனவே ஐந்தொழில்களான படைத்தல், காத்தல், மறைத்தல், அருளல் என ஐந்து வகையானத் தொழில்களைச் செய்து வந்தார்.ஊழிக்காலத்தில் உலகிலுள்ள அனைத்து உயிரிகளும் தன்னிடம் ஒடுங்க, தன் தேவியும் அவரிடம் ஒடுங்கி விடுவார். இவர் மட்டுமே அழியாமல் இருப்பவர் என ஆகமங்களும் வேதங்களும் கூறுகின்றன.

இவர் எத்தனை ஊழிக்காலங்கள் வந்தாலும் அனைத்தும்
இவரிடமே ஆரம்பிக்கின்றன,
இவரிடமே முடிகின்றன.
இவர் தனியானவர் முதன்மையானவர்.
இவரிமிருந்தே அனைத்து விதமான சக்திகளும் பிறக்கின்றன.
இவரிடமே தஞ்சமடைகின்றன.
இவரை வணங்கியே அனைத்து தேவர், மூர்த்திகளும் அனைத்து வகையான செல்வங்களையும் பெற்றனர்.
இவர் உலகின் முதன்மையானவராவர்.